ETV Bharat / state

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - "காவல்துறையிடம் கேளுங்கள்" - ஜெயக்குமார் ஆவேசம்

author img

By

Published : May 16, 2022, 1:28 PM IST

Updated : May 17, 2022, 11:44 AM IST

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து காவல்துறையிடம் கேளுங்கள் என்றும், டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம், காவல்துறையிடம் கேளுங்கள் I am on trending so dont make me as selling content ex-minister-jayakumar-says-dont-ask-me-about-vj-chitra-death-case-matter-ask-police நான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள் - ஜெயக்குமார் ஆவேச பேட்டி
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு குறித்து தன்னிடம் கேட்க வேண்டாம், காவல்துறையிடம் கேளுங்கள் I am on trending so dont make me as selling content ex-minister-jayakumar-says-dont-ask-me-about-vj-chitra-death-case-matter-ask-police நான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்யாதீர்கள் - ஜெயக்குமார் ஆவேச பேட்டி

சென்னை: 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி் கையெழுத்திட்டார். ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை இருப்பதாகவும், நிபந்தனையில் சற்று தளர்வு வழங்குமாறும் ஜெயக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் தளர்வு வழங்கியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே.16) ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டும். தன்னிடம் கேட்கக்கூடாது. தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - "காவல்துறையிடம் கேளுங்கள்" - ஜெயக்குமார் ஆவேசம்

மேலும், வளர்ச்சியில் அதிமுக ஆட்சியின் போது முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 17வது இடத்தில் உள்ளது. அதிமுக பொற்கால ஆட்சி, திமுக கற்கால ஆட்சி என தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு ஹீரோவாக செயல்பட்டதாகவும் செயல்பட்டது, திமுக அரசு ஜீரோவாக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதே திராவிட மாடலின் நோக்கம். அதிமுக சசிகலாவுடன் இணைவது என்பது எடுபடாத விசயம், இணைய வாய்ப்பே இல்லை, இணைப்பு குறித்து சசிகலா கூறும் கருத்துக் கேட்டு புளித்துவிட்டது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியலில் யார் தான் புனிதர்... கே.என்.நேரு பேச்சு !

சென்னை: 5 கோடி ரூபாய் நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி் கையெழுத்திட்டார். ஏற்கனவே ஒவ்வொரு வாரமும் திங்களன்று ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், பிரதி வாரம் ஆஜராக இயலாத நிலை இருப்பதாகவும், நிபந்தனையில் சற்று தளர்வு வழங்குமாறும் ஜெயக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் மாதம் இருமுறை ஆஜராகி கையெழுத்திடுமாறு நீதிமன்றம் தளர்வு வழங்கியதை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (மே.16) ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, இந்த கேள்வியை காவல்துறையிடம் கேட்க வேண்டும். தன்னிடம் கேட்கக்கூடாது. தான் டிரெண்டிங்கில் இருப்பதால் தன்னை வைத்து வியாபாரம் செய்ய வேண்டாம் என ஆவேசமாகத் தெரிவித்தார்.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு - "காவல்துறையிடம் கேளுங்கள்" - ஜெயக்குமார் ஆவேசம்

மேலும், வளர்ச்சியில் அதிமுக ஆட்சியின் போது முதல் மாநிலமாகத் தமிழ்நாடு இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 17வது இடத்தில் உள்ளது. அதிமுக பொற்கால ஆட்சி, திமுக கற்கால ஆட்சி என தெரிவித்தார். மேலும் அதிமுக அரசு ஹீரோவாக செயல்பட்டதாகவும் செயல்பட்டது, திமுக அரசு ஜீரோவாக உள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதே திராவிட மாடலின் நோக்கம். அதிமுக சசிகலாவுடன் இணைவது என்பது எடுபடாத விசயம், இணைய வாய்ப்பே இல்லை, இணைப்பு குறித்து சசிகலா கூறும் கருத்துக் கேட்டு புளித்துவிட்டது" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியலில் யார் தான் புனிதர்... கே.என்.நேரு பேச்சு !

Last Updated : May 17, 2022, 11:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.